Wednesday, October 24, 2012

ஓடுமீன் ஓட...

வானை மறந்தனையோ?
வானத்து
மீன்களை மறந்தனையோ?
வீசு தென்றற்
காற்றை மறந்தனையோ?

சகதிக்குள் காலூன்றினை?
தன் நிழலையே நீருள் பாய்ச்சி
கூம்பிய சிறகுகளுக்கடியில்
வியர்த்து நாறும் கக்கங்களுடன்
சளைக்காமல்
கால் மாற்றி மாற்றி
ஒற்றைக் காலில் நின்றபடி...
ஓடுமீன் ஓடத்
தன் சாதி மீன் காண்பதற்கோ
வாடி நிற்கின்றாய் கொக்கே?

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP