Tuesday, October 16, 2012

வாட்டம்

சந்தையில் அதன் பசுமையால் ஈர்க்கப்பட்டு
வாங்கி வந்துமென்ன,
துணைவியாரின்
எதிர்பாரா அசவுகரியத்தால்
வீட்டிற்கு வந்தும் அது வாடிக்கொண்டிருக்கிறது!

நீங்கள்தான் இன்று அதை ஆய்ந்து தர வேண்டும்
இல்லையெனில் அது இன்னும் வாடிவிடும்
என்று வாடினார் அவன் மனைவி

வீர்யமிழந்து விட்ட வேர்களும்
நிர்வாணமான மெலிந்த தொடைகள் போல்
நீண்ட தண்டுகளுமுடைய
அந்த உடல்களைக்
கட்டோடு அரிவாள்மனையில் வைத்து
வன்மை சிறிது கொடுத்துத்
துணித்துக் – கொண்டிருந்தபோது தான்-

யாரோ அவனுட் புகுந்து இவன் மூலமே
மனிதர் மீது மனிதர் கொள்ளும் கொடுஞ் செயல்களை
விபரமாய் நிகழ்த்திக் காட்டிக்கொண்டிருப்பதை
உணர்ந்தான்

முடிவில்
அந்த ஒத்தாசையால் அவன் மனைவிதான்
சற்று வாட்டம் நீங்கியிருந்தார்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP