Thursday, October 18, 2012

பொழுது புலர்ந்ததும்

பொழுது புலர்ந்ததும்
முற்ற முதற் செயலாய்
வீடு நீங்கி
வெளிவாசற் கதவு திறந்து
அவன் தன் நாயுடன் ஒன்றி
நடக்கத் தொடங்கியதைத்தான்-
எத்தனை பேரளவான அக்கறையுடன்
உய்த்து ஒலிகளடங்கிக்
கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தது
வானமும் பூமியுமான இப்பேருலகம்!

தன்னைத் தானே
சில சுற்றுக்கள்
சுற்றி முடித்து
புட்டம் குனித்து
முக்கி முக்கி இரண்டொரு மலத்துண்டுகள்
விட்ட பின்
விழியீரம் கதற
நான்கு கால்களாலும்
பரட் பரட்டென்று தரையைப்
பிறாண்டி முடித்து ஓயும்
நின் செயல்
பொருளற்றுப் போன பழக்கமா?
அன்றி,
நீ ஓயாது அறைந்து கூறும் சில வரிகளா?

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP