Friday, October 5, 2012

நதி

இடையறாத கொந்தளிப்புடன்
பாய்ந்து ஓடிவருகிறது கடலை நோக்கி.
பொறு நதியே, பொறு.
கடலோ, விண்ணிடம் இறைஞ்சும் பிறவி.

அமைதி கொள்ளுங்கள் நண்பர்களே
அமைதி கொள்ளுங்கள்.
விண், விம்மி விடைத்துத் துடித்தபடி
ஒவ்வோர் உயிருள்ளும் புகுந்து
ஆங்குள கோபுரங்கள் தேவாலயங்கள் மசூதிகள்
இன்ன அனைத்தையும் தகர்த்து
ஆங்கே தன்னை நிறுத்தித்
துயரனைத்திற்குமாய்
ஓர் முற்றுப்புள்ளி வைத்துவிடக்
கனலும் பிரம்மாண்டம்;
காத்திருக்கிறது;
கவனியுங்கள் நண்பர்களே, கவனியுங்கள்.

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP