Tuesday, November 13, 2012

தோட்டக்காரன்

கொஞ்சும் இயற்கையின்
மஞ்சு தவழும் அரவணைப்புக் குளுமை.
எங்கு பார்த்தாலும் மலர்க்கண்காட்சிகள் போலவே
மனிதர்களும். மருந்துக்கும்
காய்ந்த புல் காணக்கிடைக்காத பசுமை
அங்கேயே ஒரு பூந்தோட்டமும்
நர்சரிச் சந்தையும் இருந்த்தென்றால்
அது எப்படி இருக்கும் என்று
ஊகித்துப் பாருங்கள்

அங்கே ஓர் இளைஞனை நான் கண்டேன் அப்பா

என் தவிப்பினைப் பார்த்த
அந்த நர்சரி இளைஞனும்
தானும் எனக்கு ஒவ்வொன்றாய்
எடுத்து எடுத்துக் காட்டி உதவி செய்தான்
அப்புறம் மற்றவர்களையும் கவனிக்க வேண்டி
விலகிச் சென்றான்

என் நிலையிலோ ஒரு மாற்றமுமில்லை

முடிவாய் ஒன்றையும் எடுக்காமலேயே
தயங்கியவாறே நான் வெளியேறப் போனபோது
அந்த நர்சரி இளைஞன்
’ஒன்றுமே வாங்கவில்லையா’ என்று
சிரித்தபடியே கேட்டபோது –

அப்பா! அவன் எத்தனை அழகாய்
எத்தனை அன்பாய் இருந்தான் தெரியுமா!

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP