Sunday, November 18, 2012

கவிப்பாடு

வெறும் புலம்பல்கள் என் நான் சீறுகையில்
நேர்மையும் உக்கிரமுமான அப் புலம்பல்கள்
செவிகள் திருப்பும் இல்லையா
எனத் தாழ்மைப் பதிலளிக்கிறாய்

இரத்தத்தை மசியாக்கும் சக்திவிரயங்கள் என
அலட்சியம் கனல்கையில்
இரத்தம் கொடுக்க விழையும்
கருணை இல்லையா என இறைஞ்சுகிறாய்

நீ காண்பதெல்லாம் உன் மூஞ்சியைத் தானன்றி
உண்மையையல்ல எனச் சுட்டுவிரல் நீட்டுகையில்
நானும் என் மூஞ்சியுமான இவ்வுலகமும் ஓர் உண்மைதானே
எனக் கெஞ்சுகிறாய்

சரி. பிழைத்துப் போ.
ஆனாலும் எக் கவிதைகள் உனக்குக்
கவி யெனும் மகுடத்தைச் சூட்டுகிறதென யோசி
அங்கங்கே உன் கவிதைகளில்
உன்னை மீறி ஒலிக்கும் உன் அதிகாரக்குரல்
உன்னை மீறி ஓய்ந்து விடுவதைக் கவனி
இக் கவனப்பார்வை ஒன்றே மீட்குமன்றோ உன்னை!

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP