Sunday, November 25, 2012

இதோ இந்த அரிய பழம்

எந்தாயும் வாயடைத்து நிற்க
எந்தை எனக்குக் கொடுத்தது
அதாவது
எப்போதும் என் கையிலிருக்கும் கனிதான்

இது, கைப் பிடியளவு கடல்;
சமுத்திரத்தின் ஒரு துளி;
ஓடும் நதியில்
நக்கும் நாய்க்குக் கிடைத்த
ஒரே பேறு;
கானலெங்கும் மூச்சிரைக்க ஓடி
வேர்த்துக் கசகசக்கும்
உன் உள்ளங் கையிலும்-
கருணை கொண்டு
பிசுபிசுத்து நெளியும் ஓர் ஈரம்;
மின்னற்பொழுதே தூரத்தின்
சிருஷ்டிக் கனல்

நமக்குக் கிட்டாத இக் கனியன்றோ மயில்வாகனனே,
நம்மிடமுள்ள விஷமனைத்திற்கும் காரணம்!
நம்மிடமுள்ள விஷமன்றோ, என் செல்லத் தம்பீ,
இக் கனி நமக்குக் கிட்டாமைக்குக் காரணமும்!

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP