Wednesday, November 21, 2012

மேடை

இங்கிருந்து
எங்ஙனம் உறவுகொள்வது
நான் உங்கள் எல்லோரிடமும்?
எப்போது புரிந்துகொள்ளப் போகிறோம்,
நம்மை நாம் முழுவதுமாய்?
என் இதயம் உடைந்ததே
சுக்குசுக்கலாய்
பல்லாயிரம் துண்டுகளாய்க் காணும் நீங்களாய்

எனது அருமை மக்களே!
இப்போது நான் உங்களுக்குச் சொல்லவும்
இதுதான் இருக்கிறது என்னிடம்:
அதாவது, ஒரு பரிபூரண மவுனத்தின் முன்
உங்களை நீங்கள் புரிந்துகொண்டிருக்கிறீர்களா,
காலமற்ற ஒரு பரிபூரண மவுனத்தின்முன்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP