Wednesday, November 28, 2012

புத்த பூர்ணிமா

ஒரு புல்லின் உதவிகொண்டு அவனும்
ஒற்றை வைக்கோல் கொண்டு அவரும்
ஒரு குண்டூசி (அ) கொண்டையூசிகொண்டு அவளும்
இவ்வுலகை மாற்றிவிட முடியுமென்பதை உணர்ந்த
மகா ஞானிகளாய் மவுனமாய் அமர்ந்திருந்தனர்

திடீரென்று
ஒரு பேரழிவின் எச்சமாய்
தாம் மூவர் மட்டும் உயிர் பிழைத்தது போன்ற
தனிமையில் சிக்கித் துவண்ட
அவர்களை விடுவிக்கவெனவே
வேகமாய் வந்து தோன்றியது
கீழ்வானில் ஒரு முழு நிலவு;
எண்ணங்களற்ற பேரியக்கமொன்றின்
ஒளிப்பருஉரு

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP