Monday, November 12, 2012

நல்ல வாலைப் பருவம் அந்நாளிலே

அவனுள் கனன்ற காமம்தான்
எத்தனை இரகசியம்!
(இன்று வெளிப்படை)

நெடிது நீண்ட இரவின் தனிமைக்காடு கடக்கையில்
அச்சமூட்டும் கதைகளில் அழகும் இரத்த தாகமுமாய் உலவும்
அந்த மோகினிகளில் ஒருத்திதான் அங்கு வந்து
அவனை எதிர்கொள்ளக்கூடாதா என ஏங்கினான்

தீபாராதனையை வெறித்தபடி-
இந்தக் கடவுள் மீனாட்சிதான்
அவனைக் காதலித்தும் கட்டிக்கொண்டும்
இன்பம் காண வேண்டுமெனும் பிடிவாதத்
தீவிரத்தால் கனன்றான்

அருளுமிழும் விழிகளுடை
கன்னிகாஸ்திரீகளையே
அவன் மனம் நாடியதை உணர்ந்தான்

தன் மனம் மொத்தமும் கரைந்து அழிந்துபோகக் கண்டான்
மருத்துவமனையுள் இயங்கிக்கொண்டிருந்த
பெண் செவிலியர்கள் கண்டு

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP