Wednesday, November 7, 2012

நாற்காலி

வெறுமையான நாற்காலியைக் காணும்போதெல்லாம்
துயருற்றதுண்டு ஒரு காலம்!
அப்புறம், அதன் வெறுமையின் மகத்துவம் கண்டு
வியப்பில் மனம் நெகிழ்ந்து போனேன்
அதன்பின் ஒரு நாற்காலி வெறுமை
கண் பனிக்க என்னை வசீகரிப்பதே வளமையாயிற்று
தன் மீது அமர்பவனை அது கடவுளாகவன்றோ ஆக்குகிறது!

எத்தனை தீவிரமாய் முழிக்கிறது இன்று அந்த நாற்காலி!
வந்தமர்ந்த அனைவரையும் – அமர அமர
பொசுக்கிச் சாம்பலாக்கி ஊதிவிடும் அதன் மின்சாரக் கனல்!

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP