Thursday, November 8, 2012

இன்று இரவு முழுக்க விழித்திருக்கவே விழைகிறேன்

உடல் களைத்து தூக்கம் வந்தால் தூங்கிவிடுவேனேயன்றி
இந்த இரவு முழுக்க விழித்திருக்கவே விழைகிறேன்

பகலெல்லாம் வேலைகளில் கழித்து
அருகருகாய் அவரவர் வேலைகளில்
மவுனமாய் ஈடுபட்டபடி
நாம் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ள
நேரமில்லாமலாகி விட்டதால்
உன்னோடு உரையாடுவதற்காக
இந்த இரவு முழுக்க விழித்திருக்கவே விழைகிறேன்

இவ்வேளை செய்வதற்கும்
அரிய பல பணிகள் பாக்கியுள்ளன எனினும்
அவற்றை அவசரமாய்ச் செய்து முடிக்க வேண்டுமெனும்
உத்வேகம் போய்
ஒரு பயனுமற்ற செயலின்மைக்கு வந்துவிட்டேனோ
எனும் அச்சமோ பதற்றமோ இன்றி
அமைதியான...
இந்த இரவு முழுக்க உன்னோடு
உரையாட வேண்டி
விழித்திருக்கவே விழைகிறேன்

இந்த இரவினுள்ளும் என்னுள்ளும்
இதுகாறும் ஒளிந்திருந்து
இன்று சந்தித்துக்கொண்ட
மா மவுனம் நீ
பெரு விழிப்பு
பேரறிவின் ஊற்று
பெருகி
இப் பிரபஞ்சமாய் விரிந்த
வெள்ளம்
வீடு

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP