Tuesday, December 11, 2012

மெரீனா

எத்துணை அழகியது இந்த பூமி
எனச் சிந்திக்க நேரமில்லை
கட்ட்டங்களுக்கிடையே
உடைந்த தேங்காய்ச் சில்லாய் வானம்

பரந்த உள்ளமொன்றின்
கருணைக் கொடையாய்
இடையறாது புன்னகைக்கிறது
உலகின் இரண்டாவது நீண்ட கடற்கரை அழகு

கருணாகரத்தின் சூர்யோதயத்தின் முன்
காலைக்கடன் முடித்த
திவ்ய மவுனம் கலையாது எழுகின்றனர்
கரையோர மக்கள்

மாநகர் நெரிசலிலும்
கண்மூடித்தனமான விரைவிலும்
சிதையாத பக்தி, முகஞ்சுளிக்காத
பார்வையின் ஆழத்தில் ஊற்றெடுக்கிறது

வெறுப்பும் விரக்தியும் உடைந்து
கரைமணலாய் விரிகிறது
காதலர் கால்களைக் கொஞ்சுகிறது
கடலம்மையின் மடி

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP