Wednesday, December 12, 2012

கள்வன்

கண்முன்னே தம் பொன்னைப் பறிகொடுத்தவர்களால்
ஓடிஓடித் துரத்தப்படும் திருடனோ?
பிடிபட வேண்டுமெனும் அழியா ஆசையோடே
தப்பி ஓடிக்கொண்டிருக்கிறான் அவன்!

தேடி அலைவோரிடமிருந்து அவனைக் காக்கிறார்கள்
அவனைக் கண்டறிந்த சாட்சிகள்,
நேரெதிர்த் திசை சுட்டும் தம் பொய்களால்

தப்பியோடியபடியே பிடிபடாததற்காக அழுகிறான் அவன்

என்றாலும் என்றாவதொரு நாள் தாம் பிடிபடுவோமெனும்
இளைப்பாறலையும் வெறுத்து
ஓடுகிறான் ஓடுகிறான் ஓடுகிறான் அவன்
தானற்ற பேரழிவுப் பெருநிலை நோக்கி முடிவற்று

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP