Saturday, December 22, 2012

என் சிறு தோட்டத்தின் விடியலிலே

சொல்லொணாக் குதூகலம் பொங்கப்
பூத்து நிற்கும் ரோஜாவே,
எந்த ஒரு வேகம்
என் இதயத்துள் புகுந்து அதிர்கிறது இப்போது?
விரும்புகிறேன் நான் இவ்வேளை
என் இதயத்துடிப்பை உன்னுடன் பகிர்ந்துகொள்ள

நன்றி நன்றி
என் தோட்டத்தை ஒளிமயமாக்கியமைக்கு
உனக்கு நன்றி
எனினும் நான் உனை
ஏதாவதொன்று பண்ண விரும்புகிறேன்
அது: உன்னைக் கொய்து
என் கூந்தலில் சூடிக்கொள்வதல்ல;
யாராவதொருவருக்குக் கொடுத்து மகிழ
என் கரங்களை உந்தும் இந்த விழைவே -
ஓ, கடவுளே
உன்னையும் இங்கே பூக்கவைத்திருக்கிறதா!

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP