Sunday, December 23, 2012

அன்னாரை முன்னிட்டேயானாலும்

எண்ணற்ற ஆண்டுகளுக்குப்பின்
நான் இன்று கண்டடைந்துவிட்ட உறவுகள்
ஒருநாளும் சாகாதவர்கள்
மரணத்தை வென்றவர்கள்
நினைத்தவுடன் உறவாட
வந்து நிற்பவர்கள்
என்போல் எவருக்கும்
ஒரே சமயத்தில் எக்காலத்தும்

அப்படி ஒரு ஆகிருதியை
எப்படி அவர்கள் அடைந்தார்கள்?
அப்படி ஒரு ஆளுமையை
அடைவதுதான் என் இலக்கோ?

என் கால்களுக்கிடையே வந்து நின்று
ஆடையைப் பிடித்து இழுக்கிற பூனையே
கவலைப்படாதே என் செல்லமே
ஒருக்காலும் நானுன்ளைச் சிநேக ரத்து செய்பவனல்ல,
அன்னாரை முன்னிட்டேயானாலும்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP