Sunday, December 16, 2012

காதல் என்பது...

காதல் என்பது ஒரு சந்திப்பு
காதல் என்பது ஒரு கண்டுகொள்ளல்
காதல் என்பது இறையனுபவம்
காதல் என்பது ஒரு குதூகலம்
காதலுக்குக் காலம் கிடையாது
எந்தச் சொற்களாலும்
உணர்த்திவிட முடியாதது அது
காதல் மட்டுமே காதலை அறியும்
காதல் கொண்ட இதயத்தில்
காதல் மட்டுமே இருக்கிறது
காதலின் தனிச்சிறப்பு
அது மரணமறியாதது
அது அதீதப் பேதமையின்
பொங்கும் இன்பம்
பவுர்ணமிப் புன்னகை
வாழ்வு தன்னைத் தானே கண்டுகொண்டுவிட்ட
திகைப்புக் கொண்டாட்டம்
ஆனந்தக் கிறக்கம் தணிந்த
ஆழ்ந்த நிதானம்
பேரமைதி
மவ்னம்
மீப்பெருஞ்
செயல்பாட்டுக் களஞ்சியம்
அளப்பரிய செல்வம்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP