Wednesday, December 12, 2012

பல் துழாவும் நா

என்ன ஆயிற்று இந்தக் கடவாய்ப் பல்லுக்கு?
காலகாலங்கள் அடுக்கடுக்காய்ப் போர்த்தியிருந்த
ஆடைகளையெல்லாம் களைந்து நிற்கிறதோ அது?

இந்த நா ஏன் இப்படி மறிகிறது,
தன்னைத் தானே கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமல்,
வெட்கங்கெட்டு?
ஊழி பலவாய் மறைந்திருந்த சுவையரும்புகள்
விழித்துக் கொண்டனவோ?

என்ன ஆராய்ச்சிகள் வேண்டிக்கிடக்கின்றன,
முகவிகாரம் காட்டுவதொன்று போதாதா?

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP