Tuesday, December 18, 2012

பசுமர அதிசயம்

முன்னிரவின் துயில் துறந்து
இருள் அதிர அதிர
அடிபம்பு ஒலித்துக்கொண்டிருக்கும்
நகரப் பெண்டிர்

ஒலி எழுப்பக் கூசும் பேனா –
அழுது அழுது வறளத்
தன் இதயம் வடித்துக்கொண்டிருக்கும்
ஒரு ஜீவன்

நிலவு நோக்கி
உயர்ந்து மெலிந்து நிற்கும் தெருவிளக்கு

வாடி வறண்ட இத் தீயுலகில்
வாட்டம் எதிர்த்து நிற்கும் ஒரு பசுமரம்

இரகசியச் சுனையின் பேரம்பலம்

பொங்கி எழுந்த நீரூற்று

தனிப் பெருந் தீரம்

தெய்வ காரியம்

உள் ஒளிச்சேவை

உள்ளார்ந்த கடமை

பெருஞ்செயல்

உழைப்பு

உயிரின்பே-
ரியக்கம்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP