Wednesday, December 19, 2012

பாரம்

ஒவ்வொருவராய்க் கழன்று சென்றுவிடத்
தனித்து நின்ற அவன் தலையில்
பாரம் முழுதும் அழுத்துகின்ற வேதனை

கழன்று சென்றோர் ஒவ்வொருவருமே
பாரம் மேல் பாரமாக
வேதனை மேல் வேதனை

ஏகமாய் நின்றதொரு பிரக்ஞை

இலைகள் பாரமெனவும்
இனி தளிர்த்தலும் பாரமெனவும்
எல்லா இலைகளையும் உதிர்த்து நின்ற மரம் கண்டது:
வானமே இலைகளாகிவிட்ட பெரும்பாரம்,
முள்கிரீட மேற்று நிற்கும் பெருந்துக்கம்,
ஏகமாய் நின்றதொரு பிரக்ஞை,
இன்மையில் பூத்த ஒரு குழந்தையின் சிரிப்பில்
இல்லாமற் போகும் மாயம்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP