Sunday, December 23, 2012

அவன் கவிதைகள்

பிரியாவிடை கொடுத்துப் போனான்
பிரிவு எனும் சொல் கேட்டாலே
துடிதுடித்துச்
செத்துவிடுவான் போலானவன்

எங்கேயெனத் தானறியா இடம் நோக்கி
எது அவனைத் தள்ளுகிறது?
எதற்காக?

வந்து சேர்ந்தான்;
இரகசியமனைத்தும் தானறிந்தான்

அவனை இவ்விடத்தில்
அனைத்துயிரும் காண்பதற்கோ
தன் கவிதைகளை வழிநெடுக
விட்டு விட்டுச் சென்றுள்ளான்?

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP