Monday, December 24, 2012

அந்த நபர்

அவனளவுக்கு அறிவாளியுமல்ல;
அவனளவுக்குக் குணசாலியுமல்ல;
அவனளவுக்குத் தீரமும் கிடையாது.
எனினும் ஏன் அவன் அந்த நபரிடம்
விடாது பேசித் தன்னை வீணடித்துக்கொண்டிருக்கிறான்?

மொத்த பூமியின்
ஒரு மோகன உருவம் - தான் - என
அவள் அறிவாளோ?

அவளே அறியாத
ஒரு மாபெரும் இரகசியமோ
அவள் வெட்கம்?
அவள் புன்சிரி?

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP