Monday, December 24, 2012

பனை நிழல்

அவ்வறைக்குள் நுழைந்து உரையாட வருபவர்கள்
பனை நிழலில் நிற்க நேர்ந்தவர்கள்போல்
தடுமாறுகிறார்கள். நிலைகொள்ளாமல்
விரைவில் எழுந்து போய்விடுகிறார்கள்

அந்த அறையும் சரி, அவ்விடமுள்ள மனிதரும் சரி,
வேறு வேறானவர்கள் அல்ல என்பதுபோல்
அங்கே கனன்றது மிக நேர்த்தியானதோர் இருப்பு,
குழுவென்றும் கொள்கையென்றும்
சாதியென்றும் சமயமென்றும்
ஓய்வுகொள்ளவிடாது உந்தும் நெருப்பு,
புத்துயிர்ப்புக்கான
மரணத் தீயின் மவுனக் காந்தம்.
எனினும்
இருள் சூழ்கையில்
இருளோடு இருளாய்க் கரைந்து நிற்கிறது அது.
ஒளியில்
ஒளியின் குரலாய் நிமிர்ந்து நிற்கிறது

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP