Tuesday, December 25, 2012

குழந்தைப் பருவம்

வான் வந்திறங்கும் திடல்,
நடுவே
பனித்துளி மாறாப் புல்மெத்தை;
இன்னும் அதில் புரண்டு
குட்டிக்கரணமடித்துக் கொண்டிருக்கும்
குழந்தைக் குதூகலம்;
மனிதர்கள் மத்தியிலோ
கவிந்துவிடும் இருள்;
கரையும் மண்சுவர்;
கரையான் அரிக்கும் பத்தகங்கள்;
எழுவது முதல் விழுவதுவரை
உழைப்பில் மாட்டிக்கொண்டிருக்கும் மனிதரின்
உயிர் வாழ்க்கைப் பாரம்;
நீரால் ஆகிய உலகில்
நீரின்றி வாடும் பயிர்கள்;
பழகிப் போனதால்
ஒளி போன்றே காணும் இருள்;
தன்னந் தனி நடைப் பயணம்;
எனினும், உற்ற ஒரே துணையாய்க்
கூடவே வரும் நிலா

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP