Wednesday, December 26, 2012

ஓர் அதிகாலை ரோஜா

அக்காட்சியினைக் கண்டு
ஏன் என் இதயம் வலிக்கிறது?

ஆயிரம் ஆயிரம்
ஆண்டுகளாய் நீண்ட
இரவின் அழுகையின்
இறுதியாய்ப் பூத்த அபூர்வ மலர்,
அத்துணை விரைவில்
அத்துணை எளிதாய்
அழிந்துவிடக் கூடிய
நொய்மையைப் பெற்றிருக்கிறதே என்றா?


ஒவ்வொரு காலையிலும்
பூக்கிறதுதானாமே இந்த மலர்
தன் இரகசியத்தையெல்லாம் விளம்பியபடி?

அய்யோ, ஒருக்காலும்
இக் காட்சியினைக் காணாதோர்
கோடி கோடி!...ஏன்?

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP