Thursday, December 27, 2012

செங்கோல் வரையும் கருவிகள்

புள்ளி A B
ஒரே கோட்டில் இருந்தும்
ஒருவருக்கொருவர் எதிரிகளானது எப்படி?

இருவருக்கும் சமபங்களிக்கும்
ஒரு கம்பத்தை
இன்றிங்கே எப்படித்தான் நாட்டப் போகிறோம்
சண்டையின்றி சச்சரவின்றி?

கவனித்தாயா,
எந்தப் புள்ளியில் கவராய நுனி
ஊன்றுகிறதோ அந்தப் புள்ளிக்காகவே
அது வாதிடுகிறது;
கூடுதலாக வேண்டுகிறது.
ஆகவே... மற்றும் ஆகவேக்கு மேலும்
அசராமல் பதறாமல்
அதே கவராயத்தின் அதே அளவு மாறாமல்
அடுத்த புள்ளியையும் நாம் கவனிக்கிறோம்

அப்புறமான செயலோ மிக எளிது
இரு புள்ளிகளின் வில்லும் வெட்டிக்கொள்ளும்
அல்லது சந்தித்துக் கொள்ளும் புள்ளியிலிருந்து
நேர் கீழே இப்படி நட்டுவிடலாம் அந்தக் கம்பத்தை
இன்னொரு கருவியின் உதவியும் கொண்டு

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP