Tuesday, December 25, 2012

இடையறாத ஒரு கர்ஜனை

விண்ணிற்கும் வீடுகளுக்கும்
நடுவே அமர்ந்துகொண்டு அவன் யோசிக்கிறான்
வீடு முணுக்கென்று இருண்டு கொள்கிறது
இருளும் மரங்களுடன்
மூக்குச் சிவந்த வானத்தின்
விஷ சர்ப்பம் அவனைத் தீண்டுகிறது

விஷ சர்ப்ப விழிகளாய் - சிலவேளை
அவை உமிழ்ந்து வைத்த மாணிக்கக்கற்களுமாய்
எங்கும் ஒளி உமிழும் வீடுகளின் அமிலப்பெருமழை
கோடி கோடிச் சிற்றோடை வீதிகள்
கூடிக் கூடிப் பாய்ந்து சேரும் மகாசமுத்திரம்
ஒவ்வோரிரவும் அவன் கேட்கிறான்
அச்சமூட்டும் அதன் கர்ஜனையை

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP