Monday, December 31, 2012

அப்படி

மாதக் கடைசியில் கிடைக்கும் கரன்சிகளை
அப்படியே குக்கரில் போட்டெடுத்தா தின்கிறோம்?
கடவுளையும் மாமனிதர் சொற்களையும்
உண்டு கடைத்தேற
நமக்குள்ளும் வேண்டுமன்றோ
ஒரு கடைத்தெரு

நம்மைப்பற்றி எண்ணுந்தோறும்
கவலைப்பட்ட அவர்களைப் பற்றி
ஒருபோதும் சிந்திக்காத ’மேதை’களன்ளோ நாம்?
ஆனாலும் அதற்கில்லை அவர்கள் வருத்தம்

மனித வரலாற்றில்
உண்மையை அறிந்த
அந்த மாமனிதர்களையும்
அவர்கள் சுகங்களையும் துக்கங்களையும்
நான் அறிவேன்
எப்படி என்கிறாயா?
யானுமொரு மாமனிதனல்லவா,
அப்படி

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP