Tuesday, December 11, 2012

நித்ய கன்னி

தேங்கி முதிர்ந்து
கழிவாகி நாறும்
இந் நீர் உலகில்
பூப்பை அறிவிக்கும்
இரத்தச் சிவப்பு
எனினும் – கழிவு நான்

நாறும் என்னையும்
ஒற்றியெடுத்துத்
தன்னோடாக்கும் தாய்மைக்கு
ஏங்கும் பெருந்துயர் என் துயர்

கண்ட்டைந்த பெருங்கருணை
ஆரோக்யத் தாய்மை
வனமூர்க்கம் களைந்து
பொலியும்
நித்ய கன்னிமை
புத்தம்புதுப் பிறவி வேண்டித்
திறந்ததொரு வாசற் கருப்பை

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP