Tuesday, December 18, 2012

கடவுளும் கடவுளும்

அவனைக் கண்டதும் அதிர்ந்து
திருட்டு முழி முழித்தார்,
தொழுகைகளும் திருவிழாக்களுமான
தன் அந்தரங்க ஆசையை
அனுபவித்துக் கொண்டிருந்த கடவுள்

இதுவா உம்ம ஜோலி என்ற
இகழ்ச்சிக் குரல் சுட்டெரிக்க
கடவுளைப் போலின்றி கடவுளைப்போல்
மறைந்து வாழும் அவனைக் கண்டு குன்றினார்

தம் கடை கலைத்து மனிதர்தமைக்
காக்க வேண்டாமோ கடவுள்?
செயலூக்கமற்ற ஆயாசம்
சபலம்
கொண்டாட்டக் களைப்பு
தூக்கம்
மற்றும் ஒருநாளும் நீங்காத தூக்கச் சடவுடன்
வழமைகளை மட்டும்
தவறாது காத்துக் கொள்கிறார்
காலம் காலமாய்க்
கொட்டாவி விட்டபடி கடவுள்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP