Wednesday, December 5, 2012

கடப்பாறைப் பாம்பு

சடாரென்று – பதுங்க –
செம்பருத்திப் புதருக்குள் நுழையப் போவதுபோல் –
பார்வையை அறைந்தது
கடப்பாரையா? பாம்பா?

தன் அருகில் கிடந்ததை எடுத்து
பாம்பை அடித்தவன்
அந்தக் கருவியைக் கும்பிட்டுக் கொண்டாடியே
தன் வாணாள் கழிப்பானோ?

கடப்பாரைதான் பாம்பாய் மாறிப்
புதருக்குள் ஒளிந்து கொள்ள விரைகிறதோ,
புதருக்குள்ளிருந்து வெளிப்பட்ட பாம்புதான்
கடப்பாரையாய் மாறித் தப்பிக்கிறதோ, கள்ளச்சிரிப்புடன்?

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP