Thursday, December 6, 2012

மந்திர வாள்!

பூத்துக்கொண்டேயிருப்பதில்
மரம் சோர்ந்து போய்விட்டதா?

அன்பு தரும் பேரின்பச் சுவையை
மனிதர்கள் மறந்து விட்டனரா?

உலகைச் சதா புதுப்பித்துக்கொண்டேயிருக்கும்
தாய் வயிறுகள்தாம் மூடிக்கொண்டுவிட்டனவா?

கவிஞர்கள்தாம் சோர்வடைந்து விட்டார்களா?

மேலும்
இது வேடிக்கையல்லாமல் வேறென்ன,
எத்தனை பேரளவான மடமைகளையும்
ஒரே வீச்சில் வீழ்த்திவிடக்கூடிய
மந்திர வாளொன்று தன் கையிலிருந்தும்
மனிதன்துயரில் அழிந்து செத்துக்கொண்டேயிருப்பது?

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP