Tuesday, December 11, 2012

கடற்கரை

இன்னது, இப்போது என நாம் அறியாதிருக்கையிலும்
உணராதிருக்க இயலவில்லை,
எப்போதுமுள்ள ஒரு நெருக்கடிநிலை அவசரத்தை:
மூச்சிறைக்க வீசும்
கடலின் இடையறாத இத் திரைகள்
ஓர் அதி அவசரச் சமிக்ஞையேதான்

தூரத்திலிருக்கையில்
மாபெரும் கனவுகளை விதைக்கும்
புன்முறுவற் சலனங்களைத் தொனித்தது இக்கடல்

கொந்தளித்துக் கொந்தளித்து வீழ்ந்துகொண்டிருக்கிறது
கண்ணெதிரே
இன்று அண்மித்த இவ்வேளை

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP