Saturday, December 8, 2012

கூட்டத்தில்...

கூட்டத்தில் தனித்தும்
தனிமையில் கூட்டத்திலுமாகி விட்டதுதானோ
அவன் அவலம்?

அவ்வாறில்லாத போதுதான்
எத்துணை அழகியதோர் கவிதை அவன்!

கூட்டத்து நடுவிலும்
அவ்வப்போது அவனைத்
தூய்மையான குதூகலத்திலாழ்த்தி விடுகிற
வாழ்வின் கருணையைத்
தவறாது படித்தபடியே
பிடித்துப் பிடித்துப் பாதுகாத்துக் கொண்டிருக்கவும்
துடிக்கும் ஒரு பொறியியல் வல்லுநனாய்ச்
சற்று கனம் கொள்கிறான்

கூட்டத்தின் நடுவே
மாலையிட்டு அமர்த்தினால்
கால்மேல் கால்போட்டு ’நான்’ என்கிறான்
அப்புறம் நாக்கைக் கடித்துவிட்டு
மனிதனின் தன்மையையும்
அவன் துயரையும் பேசுகிறான்

கூட்டத்தின் கோமாளித்தனங்கள் கண்டு
சிரிக்கிறான்

அழாமலிருக்கவும் முடியவில்லை

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP