Thursday, December 6, 2012

வழிமறிச்சான் கோயில்கள்

எங்கே போகிறது இந்தச் சாலை
என நீள நோக்குகையில்
தொடுவானைக் காட்டி நின்றது அது.
வழியில் ஒரு கோயில்
போக்குவரத்தை இடைஞ்சலித்தபடி.
எந்த ஆளுநரும் கைவைக்க அஞ்சும்
அக்கோயில் கண்டு சாலையும்
அஞ்சி விலகி வளைந்து சென்றது

வாகனங்களை நிறுத்தி
வணங்கிச் சென்றவர்,
காலணிகளைக் கழற்றிப்
பணிந்து சென்றவர்,
தேங்காய்கள் உடைத்துப்
பலி தந்து சென்றவர்,
சும்மா சென்றவர்
யாவரும் அஞ்சும்படி
ஆரோகணித்திருக்கும் அக்கோயிலை
அங்கு போய்க் கட்டியவர் யார்? ஏன்?

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP