Wednesday, December 26, 2012

அவளுடைய உலகம்

தேங்கி முதிர்ந்து
கழிவாகி நாறும்
இந் நீர் உலகில்
பூப்பை அறிவிக்கும்
இரத்தச் சிவப்பு நீ!

தன்னை ஒற்றியெடுத்துத்
தன்னோடேயாக்கிக் கொள்ளும்
தாய்மைக்கு நீ ஏங்கினையோ?

எட்டி உதைப்பது போல்
உன்னை அருவருத்து விலக்கும்
மூர்க்க உலகை,
மலரும் புத்துணர்வின்
விரியும் பிரியம், இயற்கை -
ஏதொன்றையும் அறியாத
மூட உலகை,

நீ கண்ணகியாய் எழுந்து
எரி்த்துவிடாதபடிக் காக்கிறது,
காதலாகித், தன்னை முழுமையாய்த்
தன் பணிக்கு அர்ப்பணித்து மடியும் ஒரு ஜீவன்,
தீரமும் மென்மையும் அசையாத
உறுதியுமிக்க ஒரு பொருள், சுகாதாரத் துண்டு,
உன் வாட்டம் கண்டடைந்துவிட்ட பேரன்பு

இன்று வன மூர்க்கம் களைந்து
சோர்ந்து பொலியும் நின்முகம்
எங்கும் நிறைந்ததோர் தாய்மையின் மார்பில்
ஒரு மலராய் அணைந்திருக்கிறது, விழிமூடி;
மிருகம் ஒன்றின் காலடி யோசை கேட்டு
விழி திறக்கிறது

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP