Monday, December 17, 2012

காலி வீடொன்று...

காலி வீடொன்று புத்தம் குடியிருப்புக்குத்
தயாராய் நின்றிருக்கும்
கொள்ளை அழகை நான் பார்த்திருக்கிறேன்
இன்று அங்கே வந்து குடியமர்ந்தவனைப்
போய்ப் பார்த்தேன்

அவ்வீட்டினுள்ளே அவன்
ஒரு விநோதமான பிராணியைப் போலும்
விசித்திரமான கைதியைப் போலும்-
ஏன் அவ்விதம் காட்சியளிக்கிறான்?
சூழ்ந்து நிற்கும் அவன் பொருட்களையெல்லாம்
ஒன்றுவிடாமல் நான் ஏன் கூர்ந்து பார்க்கிறேன்?

பக்கத்திலேயே குடியிருக்கும் என்னைக் கண்டு
முதலில் அஞ்சுவதுபோல் தோன்றினான் அவன்
பின்னர் அச்சந்தருவது போலும் தோன்றுகிறான்

நேசக்கரம் நீட்டும் என் கையிலும்
பற்ற வரும் அவன் கையிலும்தான்
எவ்வளவு தயக்கங்கள்!
என் புன்னகையிலும்
அவன் பதில் புன்னகையிலும்தான்
எத்தனை புரியாத இரகசியங்கள்!

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP