Sunday, December 30, 2012

குமட்டிக்கொண்டு வருகிறது

குமட்டிக்கொண்டு வருகிறது
வீதியை அசுத்தப்படுத்திவிட்டு
அந்தக் குற்றவுணர்வே இல்லாமல்
ஜம்மென்று வீற்றிருக்கும் இவ்வீடுகளின்
சுத்தமும் நேர்த்தியும் அழகும் படோடபமும் காண்கையில்

0

யாருமறியா இவ் வைகறை இருளில்
முதல் ஒளியாய்
இவ்வீதியைப் பெருக்கிக்கொண்டிருக்கிறான் ஒருவன்,
தன் கண்ணீரால் கழுவ விரும்பும்
உன் வெற்றுப் பாதங்களை நெஞ்சிற்கொண்டு.
*1 ஒரு கவிஞன் சொல்கிறான் அவன் வேலைபற்றி:
அவன் விடியலை வரைந்து கொண்டிருக்கிறானாம்
*2 அவன் சொல்லை நாம் நம்பித்தானாக வேண்டுமாம்
ஏனெனில் அவன் கவிஞனாம்

வெதுவெதுப்பேறி வியர்த்து நிற்கிற அவன் உடல்
ஒரு குளிர்காற்றின் அலைபட்டுச் சிலிர்க்கிறது
தன் ஆதர்ச மனிதனை எண்ணி
ஆயிரமாண்டுகளாய் மணமாகாது
காத்திருந்த கன்னியொருத்தி
பாய்ந்து போய் அவனைத் தழுவிக்
கொத்திக் கொண்டதுபோல்


*1 தேவதேவன்
*2 ராபர்ட் ஃப்ராஸ்ட்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP