Saturday, January 19, 2013

அறியாததல்ல

நெருக்கடி வேளை வாகன விரைவில்
நேரமில்லாது போயிருக்கலா மெனினும்
நான் அந்த இடம் நிற்பேன் என்பது
நீ அறியாததாய் இருக்காது

திடீர்தூறல் விழத் தொடங்க
காயும் களநெல் பரபரப்பில்
நீ என்னை ஏறிட்டுப் பார்க்கா திருந்தாலும்
நான் அங்கேதான் நிற்பேன் என்பது
நீ அறியாததாய் இருக்காது

நெடுங்காலப் பிரிவின் பின்னும்
நம் சந்திப்பு நிகழவே யில்லை எனினும்
நான் அங்கேதான் நிற்பேன் என்பது
நீ அறியாததாய் இருக்காது

கண் மங்கிக் கால் தளர்ந்து
அலைக்கழியும் மனம் ஒழித்து நீ அமர்ந்திருக்கையிலும்
நான் அங்கேதான் நிற்பேன் என்பது
நீ அறியாத்தாய் இருக்காது

எவ்வேளையானாலும் எந்த இடமானாலும்
உன் பார்வைக்காய்த் தகித்தபடி
நான் அங்கேதான் நிற்பேன் என்பது
நீ அறியாததாய் இருக்காது

எவ்வேளையானாலும் எந்த இடமானாலும்
உன் பார்வைக்காய்த் தகித்தபடி
நான் அங்கேதான் நிற்பேன் என்பது
நீ அறியாததாய் இருக்காது

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP