Monday, January 21, 2013

துளசிப் புதர் நடுவே

அனைத்து இயல்களும் கூடிய ஒரு கணிதச் செயல்பாடோ
ஏதோ ஓர் உக்கிரம் கண்விழித்து
சகலத்தையும் உலுக்கி வேறோர் ஒழுங்கில் அடுக்கிவிட்டு
மீண்டும் விழிமூடிக் கொண்ட சாகசமோ

துளசிப் புதர் நடுவே வெகுகாலம் தேம்பியபடி
சிக்கிக் கிடந்த ஒரு தென்னோலைக் கீற்று
எதிர்பாரா வேளை ஒன்றில் பாம்பாய் நெளிந்து
மீண்டும் ஓலையானது?

உண்மைதான். நேற்றிருந்த தோட்டமல்ல
இன்று காணும் இத்தோட்டம்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP