Tuesday, January 22, 2013

மரங்களின் பச்சை உச்சிகளின் மேலே...

மரங்களின் பச்சை உச்சிகளின் மேலே...
நெஞ்சைக் கவ்வும் ஒரு துயர்

வானை வருடிச் செல்லும் அந்தப் பறவைகள் எங்கே?
ஒரு கணமும் பிரியாத அந்தக் கார்மேகங்கள்?
ஈரம் மாறாத அந்த மலைகள்?
சிலிர்க்க வைக்கும் அந்தத் தீண்டல்?

மரங்கள் சூழ்ந்த அந்த இல்லம் எங்கே?
தொட்டு அமரனாக்கிய அந்த மலர்கள்?

ஹோவென எழுந்து
புழுதியால் அறைகிறது காற்று
நேரம் காலம் அறியாது
இதோவென வருகிறது அமர்கிறது
ஒரு குறுநடைச் சிசு, மடி மீது

குழந்தைகள் ஏறி அமரும் சிம்மாசனம்
பறவைகளின் சிறகு வருடும் ஆகாசம்
ஏரிகளில் முகம் பார்க்கும் கார்மேகம்
ஈர மலைமுலைகள் வழங்கும் பாலாறு
எந்தப் புழுதியாலும் மாசுபடாத வெட்டவெளி

மரங்களின் பச்சை உச்சிகளின் மேலே...
நெஞ்சைக் கவ்வும் ஒரு துயர்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP