Tuesday, January 29, 2013

விழிப்பு

விடிகாலை
என்னால் விவரிக்க ஒண்ணாத
ஒரு மாமனிதனைப் போல்
என்னைத் தொட்டு எழுப்பக் கூடுமா

அல்ல
அது ஒரு மனிதனல்ல
ஒரு பரிசுப் பொருளாய்
என் முன் விரிந்திருந்த உலகம்
ஒரு மனிதனல்ல

இதயத்தில் பொங்கி
என் உடலெங்கும் சுறுசுறுப்பாய்ப்
பாயும் இந்த இரத்தத்தின் மொழியை
எப்படி மொழிபெயர்ப்பேன்
அன்பு என்பேனா
காமம் என்பேனா
வாழ்வின் துடிப்பு என்பேனா
மரணம் என்பேனா
என்ன வலி இது
என்ன ஆனந்தம் இது
அழகின் எதிரொலியா
என் தனிமையின் தவிப்பா
தன்மையின் மவுனமா
இரு பக்கங்களும் ஒன்றாகும்
எந்த ஒரு மதிற்சுவர்மேல் நிற்கிறேன்
எந்த ஊசி முனை இது?

அவ்வேளை
எதிர்ப்படும் உன்னைக்
கட்டிக் தழுவும் என் கரங்களுள்
கடமைகளின் அழுத்தம் மறந்து
ஒரு கணமேனும் உயிர்த்திருப்பாயா?

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP