Friday, February 1, 2013

சிறை

இந்தச் சுவர்களுக்கு அப்பால்
மாசு படியாத வானமும்
கம்பீரமான மலைகளும்
குளிர்ந்த மேகங்களும்
ஒளி படர்ந்த புல்வெளியும்
நகமறியாத பூக்களும்
விளையாடும் குழந்தைகளும்
துயரக் காட்சிகள் மறந்த காற்றும்
வெள்ளி மீன்கள் உலவும் ஒரு நீர்நிலையும்
இருக்கக்கூடும் என
சுவர் உடைத்தேன்
கண்டது:
மற்றோர் அறையும்
அதில் என்னைப்போல் ஒருவனும்

இருவரும் சேர்ந்து
மீண்டும் ஒரு சுவர் உடைத்தோம்
கண்டது
மற்றோர் சுவரும்
எம்மைப் போல் இருவரும்

நால்வரும் சேர்ந்து
கண்டது மற்றோர் சுவரும்
இன்னோர் நால்வருமே

இவ்வாறாய் இவ்வாறாய்
எங்கள் தொகை பெருகி
கண்டடைந்தோம்
எங்கள் இரத்தத்திலும் விழிகளிலும்
கனன்றெரிந்த அந்த பூமியை

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP