Saturday, February 16, 2013

கவிஞன்

1.
கண்ணாமூச்சி விளையாட்டில்
கண்டுபிடிப்பாளனான ஒரு குழந்தை;
தேடும் வேளையெல்லாம் துக்கம்
காணும் வேளையெல்லாம் ஜீவன்
கண்டுபிடிக்கும் வேளையெல்லாம் ஆனந்தம்

2.
அதிகாரமே கடவுள் எனில்
அதிகாரிகள் மாமன்னர்கள்
அதிகாரமற்றோர் வறியவர்கள்
கல்வியாளர்கள் காவல் அதிகாரிகள்
எழுத்தாளர்கள் கைதிகள்
கவிஞன்
அனைவர்க்கும் விடுதலை ஈட்டித்தரும்
புரட்சியாளன்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP