Friday, February 8, 2013

அத்துணை பெரிய துக்கமும் இத்துணை பயங்கரங்களும்

கண்ணில் விரல்விட்டு ஆட்டுகிறாய்
எல்லாச் சந்தோஷங்களையும்
வெட்டித் தகர்த்து
எத்துணை பெரிய துக்கத்தை ஆக்குகிறாய்

அத்துணை பெரிய துக்கமும்
ஒரு பயனுமற்றது என
மீண்டும் என் கண்ணில் உன் விரல்
அத்துணை பெரிய துக்கம்
கடக்கப்படுவதற்கோ மீண்டும் மீண்டும்
இத்துணை பயங்கரங்களும்?

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP