Wednesday, February 20, 2013

அணில்

அமைதியான இக்காலைப் போதில், என்ன இது
என் பொறுமையைச் சோதிக்கும் நச்சரிப்பு?

தலைபோகிற அவசரத்தில்
இயங்கும் தந்திக் கருவியைப்போல்
யாருக்கு
என்ன செய்திகள் சொல்லப் பிரயத்தனப்படுகிறாய்?

உன்னிடம் இல்லாத எதுகொண்டு
இக்காலைப் பொழுதோடு முரண்படுகிறாய்?

தவறு உன்னுடையதோ என்னுடையதோ?
பாடலையும் அமைதியையும் விழையும் இதயம்
நம்முடையதோ?

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP