Thursday, February 21, 2013

கரும்புச்சாறு விற்பவன்

புல்லைப் புதக் கரும்பாக்கிய தீரத்துடன்
தன் வாழ்வும் தாழ்வும்
விழைவோர் முன் தான் எனும் தாழ்மையுடன்
தன் தொழிலாலே தான் பெற்ற உரத்துடன்
போதகர்களும் தீர்க்கதரிசிகளும் நின்ற
அதே நடைபாதையில்தான் அவனும் நிற்கிறான்

காய்ந்த கருப்பஞ் சக்கைகளாய்ப் படர்ந்த ஒளியில்
சிற்றெறும்புகளாய் உலவுகின்றனர் மக்கள்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP