Tuesday, February 5, 2013

கோடை இருள்

இரவுக்கு எதிராய்
நீண்ட பகலும் தகித்தது
குழந்தைகள் தவிர
அனைவரும் புழுங்கினர்.
கோளாய் வடித்தன மாடுகள்

நதியின் மேல்தோல் சூடாக ஆக
ஆழச் சென்றுகொண்டிருந்தன மீன்கள்

மண்ணோடு முகம் புதைத்துச்
சாத்துயரில் விம்மியது ஒரு ஜீவன்
அக்காப் பறவை அழுதது
மேலும் மேலும் மென்மையானது தென்றல்
மேலும் மேலும் உறுதியாய் நின்றன மலர்கள்

அமைதியின் வானமெங்கும்
நட்சத்ரப் புண்கள்
இறந்த ஒன்றின் ஆவி
இருளில்
எல்லாவற்றையும் தனதாக்கிக்கொண்டு
என்னை மிரட்டுகிறது
பவுர்ணமி இரவில்
என்னைத் தனக்காக்கும் ஆர்வ வெறியில்
கனலும் உன் கண்கள் கண்டு
பேயாய் அலறுகிறேன்

என் தாபங்கள் விழுந்து மரிக்கின்றன
நீ எழுப்பிய பெருந்தீயில். சடாரென்று
வசந்தத்தைக் காட்டிலும் ஒளி பொருந்திய
வெறுங்கோடையாகிறது கடுங்கோடைப் பேரொலி
முதிர்காய்கள் கனியத்
தொடங்கிய திருவிழா மணம்
கோடை இருளோடு புரியும் கடும்போர்,
மீண்டும் உறக்கம் விரட்டும் போரோசை

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP