Monday, February 25, 2013

இயலாமை

எத்தகைய காகிதச் சுக்கல்கள்
பரபரக்கும் அறை இந்த உலகம்?

நெஞ்சை வலிக்க வைக்கும் எண்ணங்களை,
மயங்கி மயங்கி விழவைக்கும் நினைவுகளை,

குழந்தைகளென வந்தவர்கள் முன் உஷாராகி
அவசர அவசரமாய்க் கிழித்தெறிந்தேன்

ஒரு துண்டோடு ஒரு துண்டு ஒன்றியும்
பற்பலவாறாகவும் குழந்தைக்கு இவ்வுலகம்
அனுபவமாவதைத் தடுக்க முடியவில்லை யாராலும்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP