Thursday, February 7, 2013

என் கவிதை

நான் பாட விரும்பியிருந்தேன்
ஆட விரும்பியிருந்தேன்
ஓவியனாக விரும்பியிருந்தேன்
இசைக்கவும் விரும்பியிருந்தேன்
எழுத்தை ஆளும்
தொழில் நுட்பனாகவும் விரும்பியிருந்தேன்
ஒருபோதும் பொருளை விரும்பியதில்லை எனினும்
புகழை விரும்பியிந்தேன்
உன்னைக் கண்ட பிறகோ
இவை எல்லாமே எனை விட்டு வெட்கி
விலகியது கண்டேன்
ஆகவேதான் இன்றைய என் கவிதைகளில்
ஒரு மவுனம் மட்டுமே உள்ளது
தாமரை இலையைச் சாப்பாட்டு இலையாக்கும்
சிறு தொழில்நுட்பம் மட்டுமே உள்ளது
பூர்வஜன்ம ஞாபகம்போல்
சிறிதே இசை சிறிதே நடனம் சிறிதே ஓவியம்
பாவம்போல் எங்காவது ஒட்டிக்கொண்டிருக்கிறது

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP